சென்ற வாரம் பத்திர பதிவுக்காக சென்றிருந்த போது பத்திர பதிவு குறித்த ஆவணங்களைப் படிக்க நேர்ந்தது. இன்றும் பத்திர பதிவுகளில் ஆட்சி செய்யும் இந்த சொற்கள் தமிழ் சொற்கள்தானா என்ற கேள்வி? பதிவு சொந்தங்களை கேட்டுவிடுவோமே என துணிந்துவிட்டேன்.
படித்த சொற்கள்....
பவர் ஏஐண்டாக, லேட், ஜெனரல் பவர் பத்திரம், சர்வ சுதந்திரம்,
கிரையம், சுவாதீனம், பூர்த்தி செய்து கொடுக்கவும், சகல சர்வ வில்லங்கம்,
சர்க்கார், சகல நமுனா, கிரையம், இரத்து, சகல எண்டார்சுமெண்டு,
வக்காலத்து, பைசல், பிரதி பிரயோஐனம், ரீசர்வே, பஞ்சாயத்து, நஸ்டம்,
நெம்பர், வழித்தட பாத்திய சகிதம், தம் மைனர் மக்கள், கார்டியன், விலாசம்...
- இவை யெல்லாம் தமிழ் சொற்கள் தானா? காலங் காலமாய் தொடர்வதால் அப்படியே தொடர்கிறார்களா? தமிழை வாழ வைக்கவே வாழ்ந்து கொண்டு, தமது வாரிசுகளையும் வாழவைப்போர் ஏன் வாய் திறப்பதில்லை?
தெரிந்தா சொல்லுங்க..தெரி்ஞ்சவங்க சொல்லுங்க....