Saturday, January 9, 2010

தெரிந்திருக்கவேண்டிய செய்தி...


அன்புடையீர்,

தமிழ்நாடு தொடர்ந்து ஆறாவது ஆண்டாக போலியோ நோய் இல்லாத மாநிலமாக திகழ்கிறது. எனினும் போலியோ நோய் தாக்குதல் உள்ள பிற மாநிலங்களிலிருந்து தமிழகத்திற்கு கிருமிகள் பரவ வாய்ப்புள்ளது. போலியோ நோயை அறவே அழிக்க ஆண்டுதோறும் தொண்டு நிறுவனங்களின் துணையுடன், அரசு இலவசமாக போலியோ சொட்டுமருந்து முகாம் அமைத்து பிறந்த குழந்தை முதல் 5 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கூடுதல் போலியோ சொட்டு மருந்து இரு தவணைகளில் வழங்கபட்டு வருகிறுது.

அதன் தொடர்பாக 10.1,2010 மற்றும் 07.02,2010 ஆகியநாட்களில் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள், பொதுமக்கள் கூடும் முக்கிய இடங்கள், பேருந்துநிலையம் , ரயில் நிலையம், மற்றும் சுற்றுலா தலங்கள் ஆகிய இடங்களில் போலியோ சொட்டுமருந்து முகாம் அமைக்கபடவுள்ளது.

எனவே மேற்கண்ட நாட்களில் 5வயதிற்குட்பட்ட உங்கள் குழந்தைக்களுக்கும் மற்றும் உங்கள் கண்ணில்படும் ஐந்து வயதிற்குட்பட்ட மற்ற குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து கிடைக்க துணையிருங்கள்.

போலியோ என்ற கொடியநோயிலிருந்து நமது குழந்தைகளை காப்பது நமது கடமைதானே....


No comments: