திருமண விருந்துகளில் திணறியிருக்கிறீர்களா? தலை வாழை இலை போட்டு அழகா மேல் பகுதியில் உப்பு, இனிப்பு, கரிப்பு, துவர்ப்பு, புளிப்பு என உணவு வகைகளை வரிசை கட்டி வைத்து அதை போட்டோ வேற எடுத்து அழகு பார்த்திருப்பார்கள்.
கல்யாணத்திற்கு சென்ற நாமோ சகல வியாதிகளுடன் சாப்பிட உட்கார்ந்து விடுவோம். ஐம்பதை தாண்டிய எங்களை சொல்லிக்கிறோம். இலையை பார்த்ததும் நாக்கில் எச்சில் ஊரும். எல்லா வகையிலையும் தொட்டு டேஸ்ட் பார்த்திட்டு ...நல்லா இருக்குதில்ல.. என பக்கத்து இலைகாரரிடம் பாராட்டி விட்டு வெளியே வந்தா அங்கே ஐஸ்கிரீம், பழம், காப்பி, டீ என இன்னொரு வரிசை... எதையும் விட மனமில்லாமல் அதைக்கொஞ்சம், இதைக்கொஞ்சம் வாயை நனைச்சுட்டு பீடாவோட வெளியே வந்து, சுற்றமும் நட்பும் சூழ அமர்ந்து மணமக்களை வாழ்த்துவதற்கு பதிலாக என்ன குறை, என்ன நிறை என படடிலிடுகிறோம். விருந்தில் உணவு வகைகளின் ருசிகளைப் பற்றி ஒரு பட்டி மன்றமே நடக்குது. அதை கேட்டுக்கொண்டிருந்த நமக்கு அவர் சொல்கிற அயிட்டத்தை நாம் தொட்டுகூட பார்க்காமல் விட்டு வி்ட்டோமோ? எப்படி நம்மகிட்டயிருந்து தப்புச்சு? மனசுலே ஒரு அங்கலாப்பு.

இங்கு சாப்பிட்டு விட்டு செல்கிறவர்களின் மனத்தில் நம்ம வீட்டு விசேடத்தில் இதைவிட அயிட்டங்களை போட்டு அசத்த வேண்டும்... என போட்டி வேறு. யாருமே சாப்பிடாமல் மீதி ஆனது மட்டும் ஒரு லாரியிலே ஏற்றலாம். யாரும் இதற்கு வெட்கப்படுவதாக தெரிவதில்லை. இதுஒரு முடிவுக்கு வரவும் போவதில்லை. அரசும் கண்டுக்க போவதில்லை. வேறுஎன்ன செய்ய? நம்ம வீட்டு விசேடத்திலும் தூள் கிளப்ப வேண்டியது தான்.
எதையோ சொல்ல நினைத்து சாப்பாட்டில் புகுந்தாச்சு....கல்யாண வீடு மாதிரி ஆகிகிட்டு வருது பதிவுலகம். என்ன பாக்கறீங்க. காலையிலை தமிழ் மணத்தை பார்த்தா அறுசுவை படைத்து கல்யாண வீடா காட்சியளிக்கிறது. நம்ம போல ஆட்களுக்கு எல்லாத்தையும் சாப்பிட வேண்டும் என்ற ஆசை இருந்தாலும்...நேரம்.. காலம்... வேண்டுமே. ஏதோ நம்மால் முடிந்த அளவு படித்து ஒட்டையும் போட்டு, பின்னூட்டமும் போட்டு அப்பாடான்னு நகர்ந்துவந்து... வலைச்சரத்தில் போயிப்பார்த்தா ..கல்யாண வீட்டில் சுற்றமும் நட்பும்னு சொல்லுவதைப்போல் அவர் இடுகையை போயி பார்த்திருகிறீர்களா? அவரை.. இவரை ..என அறிமுக படுத்தும் போது அடடே எப்படி விட்டோம் என நினைக்க தோணுது. அவசர அவசரமா போயிப்பார்க்கும்போது த்து .. சிலன மனதில் எச்சில் ஊறத்தான் செய்யுது. இதைப்போல ஒரு நாளைக்கு எத்தனையோ.. ஒரு ஐந்தை படிக்கவும் பின்னூட்டம் போடவுமே நேரம் பத்த மாட்டீங்கதே. என்ன செய்ய.. இந்த பிரச்சனை எனக்கு மட்டும்தானா? உங்களுக்குமா? தெரிந்தாலும் சொல்ல மாட்டீங்க ....அப்படித்தானே..வரட்டுங்களா.
கல்யாணத்திற்கு சென்ற நாமோ சகல வியாதிகளுடன் சாப்பிட உட்கார்ந்து விடுவோம். ஐம்பதை தாண்டிய எங்களை சொல்லிக்கிறோம். இலையை பார்த்ததும் நாக்கில் எச்சில் ஊரும். எல்லா வகையிலையும் தொட்டு டேஸ்ட் பார்த்திட்டு ...நல்லா இருக்குதில்ல.. என பக்கத்து இலைகாரரிடம் பாராட்டி விட்டு வெளியே வந்தா அங்கே ஐஸ்கிரீம், பழம், காப்பி, டீ என இன்னொரு வரிசை... எதையும் விட மனமில்லாமல் அதைக்கொஞ்சம், இதைக்கொஞ்சம் வாயை நனைச்சுட்டு பீடாவோட வெளியே வந்து, சுற்றமும் நட்பும் சூழ அமர்ந்து மணமக்களை வாழ்த்துவதற்கு பதிலாக என்ன குறை, என்ன நிறை என படடிலிடுகிறோம். விருந்தில் உணவு வகைகளின் ருசிகளைப் பற்றி ஒரு பட்டி மன்றமே நடக்குது. அதை கேட்டுக்கொண்டிருந்த நமக்கு அவர் சொல்கிற அயிட்டத்தை நாம் தொட்டுகூட பார்க்காமல் விட்டு வி்ட்டோமோ? எப்படி நம்மகிட்டயிருந்து தப்புச்சு? மனசுலே ஒரு அங்கலாப்பு.

இங்கு சாப்பிட்டு விட்டு செல்கிறவர்களின் மனத்தில் நம்ம வீட்டு விசேடத்தில் இதைவிட அயிட்டங்களை போட்டு அசத்த வேண்டும்... என போட்டி வேறு. யாருமே சாப்பிடாமல் மீதி ஆனது மட்டும் ஒரு லாரியிலே ஏற்றலாம். யாரும் இதற்கு வெட்கப்படுவதாக தெரிவதில்லை. இதுஒரு முடிவுக்கு வரவும் போவதில்லை. அரசும் கண்டுக்க போவதில்லை. வேறுஎன்ன செய்ய? நம்ம வீட்டு விசேடத்திலும் தூள் கிளப்ப வேண்டியது தான்.
எதையோ சொல்ல நினைத்து சாப்பாட்டில் புகுந்தாச்சு....கல்யாண வீடு மாதிரி ஆகிகிட்டு வருது பதிவுலகம். என்ன பாக்கறீங்க. காலையிலை தமிழ் மணத்தை பார்த்தா அறுசுவை படைத்து கல்யாண வீடா காட்சியளிக்கிறது. நம்ம போல ஆட்களுக்கு எல்லாத்தையும் சாப்பிட வேண்டும் என்ற ஆசை இருந்தாலும்...நேரம்.. காலம்... வேண்டுமே. ஏதோ நம்மால் முடிந்த அளவு படித்து ஒட்டையும் போட்டு, பின்னூட்டமும் போட்டு அப்பாடான்னு நகர்ந்துவந்து... வலைச்சரத்தில் போயிப்பார்த்தா ..கல்யாண வீட்டில் சுற்றமும் நட்பும்னு சொல்லுவதைப்போல் அவர் இடுகையை போயி பார்த்திருகிறீர்களா? அவரை.. இவரை ..என அறிமுக படுத்தும் போது அடடே எப்படி விட்டோம் என நினைக்க தோணுது. அவசர அவசரமா போயிப்பார்க்கும்போது த்து .. சிலன மனதில் எச்சில் ஊறத்தான் செய்யுது. இதைப்போல ஒரு நாளைக்கு எத்தனையோ.. ஒரு ஐந்தை படிக்கவும் பின்னூட்டம் போடவுமே நேரம் பத்த மாட்டீங்கதே. என்ன செய்ய.. இந்த பிரச்சனை எனக்கு மட்டும்தானா? உங்களுக்குமா? தெரிந்தாலும் சொல்ல மாட்டீங்க ....அப்படித்தானே..வரட்டுங்களா.